Site Activity
-
anantaraman ramanujadasan and chethan are now friends 10 hours, 34 minutes ago · View
-
-
anantaraman ramanujadasan and Jayakumar Narayan are now friends 1 day, 7 hours ago · View
-
Brett Hutton wrote a new blog post: Butting in Brisbane Queens St Mall Ban 1 day, 13 hours ago · View
Over the months there has been speculation of a smoke-free ban within the Queens St of Brisbane City and Albert St currently being voted on via phone and post set for next year. These activists have been rallying all over the shopping mall and beyond pulling up potential voters for the campaign of discrimination against [...]
-
Brett Hutton wrote a new blog post: Financial Gain or Loss Further Education 1 day, 13 hours ago · View
Let’s ask our self’s this, is it beneficial in pursuing further education via a University, Tafe or even an institution readily available. Our parents encourage us to follow through the education system, teachers say it will improve your chances, the government spends more tax money on the education section than most infrastructures with the idea [...]
-
Brett Hutton wrote a new blog post: Poor People Facing Hardship 1 day, 13 hours ago · View
All people at one time or another are going to hit rock bottom this could be due to money crisis most common or due to the fact that life has become overwhelming for some that hinders their functionality as a man of society. In relation to the fact of becoming lost is that people sometimes [...]
-
Harini Raghuraman Iyengar posted an update: 2 days, 2 hours ago · View
My path is chosen
-
-
-
SANTHANAM P became a registered member 2 days, 11 hours ago · View
-
Ramshankar became a registered member 3 days, 14 hours ago · View
-
Rajesh joined the group Srivaishnava Scholors 4 days, 17 hours ago · View
-
-
RadhekrishnaSathsangam posted an update: 4 days, 22 hours ago · View
ராதேக்ருஷ்ணா
புன்னகை !
பார்த்தவுடன் சந்தோஷம் தருவது !
எல்லோரும் ஆசைப்படுவது !
எல்லோரும் செய்யவேண்டியது !
சிலரைப் பார்த்தால்
தானாக சந்தோஷம் தரும் . . .சிலரை நினைத்தால்
அளவில்லாத ஆனந்தம் வரும் . . .சிலரைப் பற்றி பேசினால்
நிச்சயம் குதூகலம் வரும் . . .சிலரைப் பற்றி கேட்டால்
கண்டிப்பாக புன்னகை வரும் . . .இவை அனைத்தும்
சேர்ந்த ஒருவர் இருந்தால் . .? !
அவரைப் பார்த்தால் . . ? !எப்படி இருக்கும் . . .!
சொல்ல முடியாது . . .
வர்ணிக்க முடியாது . . .ஆனாலும் அனுபவிக்க முடியும் . . .
அனுபவித்தால் ! ! !அனுபவித்தேன் . . .
பார்த்தேன் . . .ரசித்தேன். . .அனுபவித்தேன்
உனக்கும் சொல்கிறேன் . . .
என்ன பார்த்தேன் ?
எங்கே பார்த்தேன் ?
எப்படி பார்த்தேன் ?நிச்சயம் சொல்கிறேன் . . .
ப்ரார்த்தனை செய்து கொண்டிரு . . .ப்ரார்த்தனை செய்துகொண்டு
காத்திருந்தாயா ?காத்திருத்தல் ஒரு சுகம் . . .
அதிலும் மிக உயர்ந்த ஒரு
பொருளுக்காகவோ,
மிக மிக உயர்ந்த ஒருவருக்காகவோ
காத்திருத்தல் ஒரு பரமானந்தம் !நானும் காத்திருந்தேன் !
பல வருடங்களாகக் காத்திருந்தேன் !
ஆசை ஆசையாய் காத்திருந்தேன் !
அழுகையோடு காத்திருந்தேன் !
ஆவலோடு காத்திருந்தேன் !
திடீரென்று என்னை
வரவழைத்துவிட்டான் . . .புன்னகை அழகன் . . .
புன்னகை மன்னன் . . .
புன்னகை நாயகன் . . .
புன்னகை பகவான் . . .
புன்னகையின் அர்த்தம் . . .வரம் தரும் ராஜன் . . .
அருளாளப் பெருமாள் . . .
தேவராஜன் . . .
துயரறு சுடரடி ஸ்வாமி . . .என் வரதராஜன் என்னை அழைத்தான் . . .
Lord Sri Varadharajan, Kanchipuram
அடியேனை அழைத்தான் . . .
அத்திகிரி நாதன் அழைத்தான் . . .பெருந்தேவி மணாளன் அழைத்தான் . . .
பெருமாள் கோயில் என்றாலே,
அது காஞ்சி வரதராஜன் கோயில்தான்
என்று ஸ்ரீ வைஷ்ணவம் சொல்லும் !
அந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றேன் !எதிர்பார்க்காத ஒரு தரிசனம் . . .
சரியாக அன்று ஆவணி மாதப் பிறப்பு !
(17 ஆகஸ்ட் 2010
உனக்குப் புரியவே இந்த தேதியைக்
குறிப்பிட்டேன்)கோயிலின் வாசலில் நிற்கும்போதே
மேனி சிலிர்க்க, ஒரு சுகானுபவம் !பெரிய துளசி மாலையை
தனக்காக வாங்க எனக்கு
ஆணையிட்டான் !உள்ளே நுழைந்ததும்
சிலு சிலுவென சுகமான
தென்றலாய் என் வரதன்
என்னை{எங்களை}த் தீண்டினான் . . .உள்ளும் புறமும் சிலிர்க்க,
திருக்கச்சி நம்பிகளின்
ஆலவட்ட கைங்கர்யத்தில்
திளைத்த ராஜனின் அரண்மனையில்
ஆனந்தமாய் நுழைந்தேன்{நுழைந்தோம்} . . .உள்ளே அழகாகத் திருடன்,
வெட்கமில்லாமல் மண்டபத்தில்
அனைவரும் தன்னை மறந்து
வேடிக்கைப் பார்க்கச் சுகமாக,
மஞ்சனமாடிக் கொண்டிருந்தான் . . .நாங்களும் எங்களை மறந்தோம் . . .
ப்ரபுவின் திருமுக மண்டலமும்,
தாயாரின் அதிசுந்தர வதனமும்,
பூதேவியின் பூத்த திருமுகமும்,
என்னை {எங்களை} வா வா
என்று அழைக்க ஆனந்தத்தில்
திக்குமுக்காடிப்போனேன்{போனோம்}பக்தியுடையோருக்கு எளியனான
வரதராஜன் ஆசையோடு பெண்கள்
தொடுத்த ஜாதி மல்லியை வாங்கிச்
சாற்றிக்கொண்டு, எனக்கு {எங்களுக்கு}
ஆசிர்வாதம் செய்தான் . . .ஆனந்தமாய் தீர்த்தம் தந்து,
தன் திருவடிகளை (சடாரியை)
எங்கள் முடிகளில் வைத்து,
தன் கருணையை என் {எங்கள்}
மேல் பொழிந்தான் . . .திருக்கச்சி நம்பிகள்,
ஸ்வாமி ஆளவந்தார்,
ஸ்ரீ பெரிய நம்பிகள்,
யதிராஜன் ஸ்வாமி இராமானுஜர்,
ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகர்,
ஸ்ரீ மணவாள மாமுனிகள்,
போன்ற மஹாத்மாக்கள்
திருவடி பதித்து நடந்த,
அத்திகிரி நாதனின் கோயிலில்
நானும்{நாங்களும்} நடந்தேன்{நடந்தோம்} !வரதராஜனின் திருமஞ்சனத்தை
ரசித்துவிட்டு,ஸ்வாமி இராமானுஜரைத்
தன் பிள்ளையெனக் கொண்டாடி,
அவரிடத்தில் தீர்த்தம் வாங்கிக்குடித்த,
வேடுவச்சியாக வந்த,
பெருந்தேவித் தாயாரைச்
சேவித்தேன் {சேவித்தோம்} . . .என்னவென்று சொல்வது . . .
பெருந்தேவித் தாயாரின் அழகை . . .
அவளின் திவ்ய கருணையை . . .
மனதிலே ஒரு சாந்தி வந்தது. . .
மனது பாரத்தைவிட்டு லேசானது . . .பெருந்தேவித்தாயாரின் உத்தரவோடு,
யக்ஞக் குழந்தையான,
அவளின் பர்த்தாவைக் காண,
குழந்தை போல்
ஓடினேன் {ஓடினோம்}இரு இன்னும் முடியவில்லை . . .
ஒரு நாளில் சொல்ல
ஆதிசேஷனாலேயே முடியாது . . .
நான் எம்மாத்திரம்…
மீண்டும் நாளை தொடருவேன் . . .
அதுவரை இதையே
திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டிரு . . .படித்துப் பார்த்தாயா ? ! ?
சரி நான் தொடருகின்றேன் . . .
”நான் ஒன்றும் தனம் சேர்க்கவில்லை !
என் தகப்பனாரும் சேமித்துவைக்கவில்லை !
என் முப்பாட்டனார் ப்ரம்மதேவன்
ஹஸ்திகிரியின் மேல் சேமித்த தனமான
அத்திகிரி அருளாளன் வரதராஜன்
இருக்கின்றான்” . . .என்று
நிகமாந்த தேசிகர் சொன்ன
காஞ்சி நாயகனைக் காண படிகளில்
துள்ளி ஏறினேன் {ஏறினோம்} . . .எந்தப் படிகட்டுகளில்
யாதவப்ரகாசரின் தாயாருக்கு,
அவளுடைய கேள்விக்கு,
பதில் கிடைத்ததோ,
அந்தப் படிக்கட்டுகளில்
ஆனந்தமாக ஏறினேன் {ஏறினோம்} . . .எந்தப் படிகட்டுகளில்,
திருக்கச்சி நம்பிகள் தினமும்
பலமுறை ஏறி இறங்கினாரோ,
அந்தப் படிக்கட்டுகளில்
ஆனந்தமாக ஏறினேன் {ஏறினோம்} . . .எந்தப் படிக்கட்டுகளில்,
காரேய் கருணை இராமானுஜர்,
துள்ளிக்குதித்து ஏறினாரோ,
அந்தப் படிக்கட்டுகளில்
ஆனந்தமாக ஏறினேன் {ஏறினோம்} . . .எந்தப் படிக்கட்டுகளில் ஏறினால்,
கோடி ஜன்மாவின் பாபங்கள்
சத்தியமாக நாசமாகுமோ,
அந்தப் படிக்கட்டுகளில்
ஆனந்தமாக ஏறினேன் {ஏறினோம்} . . .படி ஏறக் கால்களையும் கொடுத்து,
தன்னைப் பார்க்க ஆசையும் கொடுத்து,
தரிசிக்க நேரத்தையும் தந்த,
வரம் தரும் ராஜனைக் காண,
தேசிகரும் மேனி சிலிர்க்க ஏறின,
அந்தப் படிக்கட்டுகளில்
ஆனந்தமாக ஏறினேன் {ஏறினோம்} . . .ஏறி உள்ளே சென்றால்,
அங்கும் சில படிக்கட்டுகள் . . .
அதில் ஏற ஆரம்பித்தவுடன்,
அசந்துபோனேன் {அசந்துபோனோம்} !
அந்தப் புன்முறுவல் பூத்தத்
திருமுக மண்டலத்தைப் பார்த்து,
வாய் விட்டு,இதயம் ஆனந்தத்தில்
திளைக்க,ஆத்மா ப்ரசன்னமாக,
ஹா ஹா என்று சத்தமாக,
சிரித்தேன் . . .{சிரித்தோம்} !ஓ ! என்ன சிரிப்பு !
எத்தனை அழகான சிரிப்பு !
என்ன அற்புதமான புன்னகை !
அந்தப் புன்னகையில்தான்,
எவ்வளவு உரிமை. . .
புன்னகை மன்னன் இவன் !
புன்னகை அழகன் இவன் !
புன்னகை ஜோதி இவன் !போதும் . . .போதும் . . . போதும் . . .
எல்லா துன்பங்களும்,
அழிந்து போகும் இடத்தைக்,
கண்டுபிடித்துவிட்டேன் . . .
வரதராஜனைப் பார்த்தவுடன்,
அந்தப் புன்னகையைப் பார்த்தவுடன்,
மனதில் சஞ்சலங்கள் ஓடிவிட்டன . . .நிச்சயம் முதலில் பகவானின்
திருவடியைத் தான் பார்க்கவேண்டும்
என்பது தெரிந்தும்,
முதலில் வரதராஜனின் திருமுகமே,
என்னை வசீகரித்தன . . .
அதுவும் அந்தப் புன்னகை . . .
ஐயோ ! இதுவரை எங்கும் காணாதது !
யாரிடமும் இல்லாதது !
என் மனதின் சந்தோஷம்
உனக்குப் புரிகிறதா . . ?
தயவு செய்து புரிந்துகொள்ளேன் . . .நான் சொல்வதில் சந்தேகம்
இருந்தால் நீயே போய்ப் பார் . . .
பார்த்தால் நீ ஒரு ஆனந்தவேதம்
எழுதுவாய் . . .
இதை விட அழகாக எழுதுவாய் . . .வரதராஜா ! உன் புன்னகைக்கு
நான் அடிமை . . .
வரதராஜா ! உன் புன்னகைக்கு
என் வம்சமே அடிமை . . .வரதராஜா ! உன் புன்னகைக்கு
அடியேன் ஒரு சன்மானம்
தரவேண்டுமே . . ?
என்ன சன்மானம் தருவது ?
எனக்குப் பிடித்ததைத் தானே
தரவேண்டும் . . .
எனக்கு ரொம்பப் பிடித்தது
என் சிஷ்யர்களே . . .
ஆம். . . உன் புன்னகைக்கு
என் சிஷ்யர்களைத் தந்தேன் . . .இனி என் சிஷ்யர்கள் உன் சொத்து . . .
அவர்களின் வாழ்க்கை உன் பொறுப்பு . . .
அவரின் ஆனந்தம் உன் புன்னகை . . .இன்னும் கூட நிறையச் சொல்ல
ஆசை அலைமோதுகிறது . . .
இனி நீ வரதராஜனின் சொத்து . . .இதற்கு மேல் நான் உனக்கு
என்ன சொல்லவேண்டும் . . .வரதனின் கையை உற்றுப்பார் …
”மா சுச:” என்று எழுதி வைத்திருக்கிறார் !அதாவது ”வருந்தாதே” என்று அர்த்தம் . . .
இனி வருந்தாதே . . .
வருத்தம் வந்தால் வரதனின்
திருக்கையை நினைத்துக்கொள் . . .வா . . . ஒரு நாள்
நாம் எல்லோரும் சேர்ந்து
வரதனைக் காணப் போகலாம் . . .சீக்கிரம் வந்துவிடு . . .
உன் எஜமானனைக் காண. . .
Lord Varadharaja Temple, Kanchipuramஉனக்காக ஒரு
புன்னகை காத்திருக்கிறது . . .உன்னைக் காண ஒரு
புன்னகை மன்னன்
காத்திருக்கிறான் . . .உன்னை வசீகரிக்க
ஒரு
புன்னகை அழகன்
தயாராக நிற்கிறான் . . .வா . . .
என் சமத்துக்குழந்தையே . . .
வா . . .வரதனைக் காண வா . . .
புன்னகை அழகனைக்
காண வா . . . -
anantaraman ramanujadasan and RadhekrishnaSathsangam are now friends 4 days, 23 hours ago · View
-
-
vandana.sandrana became a registered member 1 week ago · View
-
Jayakumar Narayan became a registered member 1 week ago · View
-
lovelywhitemala posted an update: 1 week ago · View
trewtr ewtr wtrew trewtrewtr
-
lovelywhitemala became a registered member 1 week ago · View
- Load More